
மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி களுக்காக வைகை ஆற்றின் பல் வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன. சித்திரைத் திருவிழாவுக்கு முன்பு இந்த பள்ளங்களை சீரமைத்து மூட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பக்தர்களிடையே எழுந்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவில் ஏப்ரல் 16-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. கள்ளழகரை காண லட்சக்கணக்கான மக்கள் ஆற்றுக்குள்ளும், கரைகளிலும் திரள்வர். பெண்கள், குழந்தைகள் உட்பட குடும்பம், குடும்பமாக மக்கள் ஆற்றில் கள்ளழகரை வரவேற்பர். கள்ளழகருக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காகவும் ஏராளமானோர் கூடுவது வழக்கம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்