
தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தில் ஆற்காடு நவாப் அன்வர்தீகான் கால கல்வெட்டு கண்டெடுக்கப் பட்டுள்ளதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு நடுவம் தலைவர் த.ம.பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வந்தவாசி அடுத்த இளங்காடு கிராமத்தின் குளக்கரை அருகே தெலுங்குமொழி கல்வெட்டு கிடைத்தது. 4 அடி உயரமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகை. முன்புறம் 19 வரியும், பின்புறம் 11 வரியும் இருந்தது. இக்கல்வெட்டை கல்வெட்டு ஆய்வாளர் யேசுபாபு ஆய்வு செய்தார். அதில், இக்கல்வெட்டு சக ஆண்டு 1669-ல், அதாவது பொது ஆண்டு 1749-ல் வெட்டப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்