
நிதிநிலை அறிக்கையில் தனியார் சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகை குறித்த அறிவிப்பு இல்லாதது கரும்பு விவசாயிகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது என தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்க தமிழக தலைவர் கே.வி.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டப்பேரவையில் பொது நிதிநிலை அறிக்கையை தொடர்ந்து 2-வது முறையாக வேளாண் தனி நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் நேற்று தாக்கல் செய் துள்ளார். தமிழகத்தில் வருவாய் பற்றாக்குறை, ரூ.7 ஆயிரம் கோடியாக குறைய உள்ளது மகிழ்ச்சி. 8 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை குறைகின்றது. இது, நிதி நிர்வாகத்தில் அரசு மேற்கொண்ட முயற்சியால் வருவாய் பற்றாக்குறை குறைந் திருப்பது நல்ல முன்னேற்றம். தமிழகத்தின் வளர்ச்சிக்கான நிதிநிலை அறிக்கை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்