
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வில் கடந்த 12 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக்கூட தகுதியற்றவர்கள் என்பதால் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதிய உயர்வு தொடர்பான அவர்களின் கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) 60 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என கடந்த 2011-ல் தமிழக அரசு உத்தரவிட்டது. 2011-ம் ஆண்டுக்கு முன்பாக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி அவர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையை நிறுத்திவைத்து தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்