
சென்னை: மருத்துவ படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு இயற்றிய சட்டம் செல்லும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக முந்தைய அதிமுக அரசு கடந்த 2020-ம் ஆண்டு 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கான சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்த 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் எளிதாக இடம் கிடைத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்