
சென்னை: வசதி படைத்தவர்கள், விஐபிக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்களா என்பதை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கள அலுவலர்களுக்கு உணவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த 2-ம் தேதி உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், உணவுப்பொருள் வழங்கல்துறை ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர்,மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்