
சென்னை: கொளத்தூர் தொகுதியில் ரூ.111.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அப்போது, திராவிட மாடல் அரசு கம்பீரமாக கடமையாற்ற பொதுமக்கள் என்றும் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
சென்னை கொளத்தூரில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கவுதமபுரம் திட்டப் பகுதியில் ரூ.111.80 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 840 அடுக்குமாடி குடியிருப்புகளின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்