
சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று விளக்கம் அளித்தார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதே தினத்தில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் கற்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 47 பேர் காயமடைந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்