
மறைமலை நகர்/காஞ்சி/ திருவள்ளூர்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதன்படி 4,453 மாணவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்திட்டம் நேற்று (செப்.16) தொடங்கப்பட்டது. உணவு தயாரிப்புக்காக மறைமலை நகர், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் 3 சமையல் கூடம் ரூ.70 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தினமும் சமைத்து வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு உணவு அனுப்பி வைக்கப்படும்.மறைமலை நகர் நகராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆ. ர. ராகுல் நாத் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து மறைமலை நகரில் உள்ள 8 பள்ளிகளில் 969 மாணவர்கள், நந்திவரம் கூடுவாஞ்சேரியில் உள்ள 2் பள்ளிகளில் 613 மாணவர்கள் என 1,582 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்