
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த விளை நிலங்களை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டு, வீடுகள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே, கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. கடந்த வாரம் இந்த மழையின் தீவிரம் அதிகரித்தது. இதனால் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. பாதிக்கப்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்