
சென்னை: இந்து சமய அறநிலையத் துறையின் அனைத்து மண்டல இணை ஆணையர்கள் உடனான ஆலோசனை கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. காணொலி வாயிலாக நடந்த இக்கூட்டத்தில் துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், கவிதா, இணை ஆணையர்கள் ஜெயராமன், செந்தில்வேலன் பங்கேற்றனர்.
இதில் அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, “கோயில்களில் உலோக சுவாமி சிலைகளை பாதுகாக்கும் வகையில் ரூ.156.67 கோடியில் 1,835 பாதுகாப்பு அறைகள் கட்டப்பட உள்ளன. இதில், 1,200 பாதுகாப்பு அறைகள் கட்டுவதற்கான பணிகள் அடுத்த மாதத்துக்குள் தொடங்க உள்ளன. இப்பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகள் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்