
திருப்பத்தூர்: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை விரைவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பொது விநியோகத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலமாக தமிழகம் உள்ளது. நாட்டிலேயே கால்நடைப் பராமரிப்புக்கு வட்டியில்லா கடன் தமிழகத்தில்தான் வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் தற்போதுவரை ரூ.40 கோடி அளவுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் ரூ.100 கோடிக்கு மேல் கடன் வழங்கப்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்