
சேலம்: திருவனந்தபுரம் - கோரக்பூர் விரைவு ரயிலின் முன்பதிவு பெட்டிகளை ஆக்கிரமித்த 300 வடமாநில தொழிலாளர்களை, சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் டிக்டெக் பரிசோதகர்கள், போலீஸார் இறக்கி விட்டு நடவடிக்கை எடுத்தனர்.
வடமாநிலங்களில் வரும் 8ம் தேதி ஹோலி பண்டிகை நடக்கவுள்ளதை அடுத்து, தமிழ்நாடு, கேரள மாநிலங்களில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பலரும் பண்டிகையை கொண்டாட வண்டி, சொந்த ஊர் திரும்பி கொண்டுள்ளனர். வடமாநிலம் செல்லும் ரயில்களில் முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக் கொண்டும், பலர் டிக்கெட் எடுக்காமலும் முன்பதிவு பெட்டிகளில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்