
சென்னை: சென்னை நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 139 அரசு பள்ளிகள் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட உள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதியில் 790 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. அப்பள்ளிகளில் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் 138 பள்ளிகள் மற்றும் சென்னை மாவட்டத்தில் ஒரு பள்ளிஎன மொத்தம் 139 அரசு பள்ளிகள் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைக்கப்பட உள்ளன. எஞ்சியுள்ள அரசு பள்ளிகள் தொடர்ந்துபள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்