
திருப்பூர்: திருப்பூர் பின்னலாடை தொழில் 1980-ம் ஆண்டுக்கு பிறகு அசுர வளர்ச்சி பெறத் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில் விவசாய குடும்பங்களை சேர்ந்த பலர் தங்களது உழைப்பை நம்பி திருப்பூருக்கு படையெடுத்தனர். ’வேலைக்கு ஆட்கள் தேவை’ எனும் பதாகைகள் வீதிதோறும் பெருக்கெடுக்க, தொழிலாளர்கள் தேவை அதிகரிக்கத் தொடங்கியது.
2005-ம் ஆண்டுக்கு பிறகு வடமாநிலத் தொழிலாளர்கள் வரத் தொடங்கினர். 2010-ம் ஆண்டுக்கு பிறகு, அதிக அளவில் வரத் தொடங்கினர். காஷ்மீரை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தொடங்கி இந்தியாவில் உள்ள 300-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்கள் இங்கு தொழிலாளர்களாக தங்கள் வாழ்வை தொடர்கின்றனர். திருப்பூரில் 10 ஆயிரம் நிறுவனங்களும், சுமார் 5 முதல் 6 லட்சம் வடமாநிலத் தொழிலாளர்களும் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்