
திருப்பத்தூர்: காய்ச்சல் என வந்த சிறுமிக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்ட மாத்திரையில் இரும்பு கம்பி யிருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த வேப்பல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி சக்திவேல் (35). இவரது மகள் மோனிகா (7). இந்நிலையில், சிறுமி மோனிகாவுக்கு நேற்று காய்ச்சல் ஏற்பட்டதால் அவரது பெற்றோர் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுமியை அழைத்து வந்து மருத்துவரிடம் காட்டினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்