
சென்னை: தமிழகத்தில் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில், ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை 2021-ல் தமிழக அரசு தொடங்கியது. இத்திட்டத்தில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், இதய நோய்கள், டயாலிசிஸ் உள்ளிட்டநோயாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, அந்தந்த மாவட்டநிர்வாகங்கள் சார்பில், களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். அதன்படி, மக்களை தேடி மருத்துவ திட்டத்தில், தொற்றா நோய்களுக்கு தொடர் சிகிச்சையை ஒரு கோடிபேருக்கும் மேல் பெறுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்