
சென்னை: அதிமுக பேரணியால் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி சாலைகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
திமுக ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்படும் என்றும், இதற்காக ஆளுநர் மாளிகை நோக்கி பேரணிநடத்தப்படும் என்றும் அதிமுக தெரிவித்திருந்தது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 9 மணி முதலே சின்னமலை வேளச்சேரி சாலையில் அதிமுகவினர் குவியத் தொடங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்