
சென்னை: தமிழகத்தின் பல்வேறு இடங்களில்,ரூ.1,859 கோடியில் நிறுவப்பட்டுள்ள 16 புதிய துணை மின்நிலையங்களைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு அடிக்கல்லும் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை – புளியந்தோப்பு, தூத்துக்குடி - ஒட்டப்பிடாரத்தில் ரூ.1,718.95 கோடி செலவில் 2 புதிய 400 கிவோ துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதுதவிர, அரியலூர் - நடுவலூர், செங்கல்பட்டு - படூர், கிருஷ்ணகிரி - பெண்ணேஸ்வரமடம், மதுரை - தனியாமங்கலம், நீலகிரி – மலர்பெட்டு; சேலம் – நத்தக்கரை, திருவள்ளூர் – அரசூர் ஆகிய இடங்களில் ரூ.94.20 கோடியில் 7 புதிய 110 கிவோ துணை மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்