
சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய அதிதீவிர ‘மொக்கா’ புயல், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து, வடக்கு, வடமேற்கு திசையில் சுமார் 560 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, இன்று (மே 14) நண்பகல் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் கடற்கரையை அதிதீவிர புயலாக கடக்கக்கூடும். அப்போது, மணிக்கு 150-160 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 175 கி.மீ. வேகத்திலும் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்