
மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதது, மாதாந்திர பங்கீட்டு நீரை கர்நாடகா அரசு வழங்காதது உள்ளிட்டவற்றால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. இதனால், தற்போது இருக்கும் நீர் இருப்பை கொண்டு குறுவை சாகுபடியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கேரளம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்