
ராமேசுவரம்: 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு மீனவர் நல வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் மீன்பிடிப்பு மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபடும் மீனவத் தொழிலாளர்களின் விரிவான சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களது நலனை பேணும் பொருட்டும், கடந்த 2007-ம் ஆண்டு தமிழ்நாடு மீனவர் நல வாரியம் அமைக்கப்பட்டது.
மீன்வளத்துறை அமைச்சரை வாரியத் தலைவராகக் கொண்ட இந்த ஆணையத்துக்கு எட்டு அலுவல் மற்றும் 12 அலுவல் சாரா உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். 2009-ம் ஆண்டுடன் இவர்களின் இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் அவர்களுக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்