Tuesday, July 11, 2023

https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/07/11/large/1046522.jpgகோவில்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் திடீர் மறியல்: போலீஸார் தடியடி

கோவில்பட்டி: சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள முத்துக்கோன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரியாதை செலுத்த ஏராளமானோர் இருச்சக்கர வாகனங்கள், கார்களில் வந்தனர். இதையொட்டி மாவட்ட காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.

மேலும் இதற்காக மதுரை - நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கட்டாலங்குளம் விலக்கில் உள்ள அழகுமுத்துக்கோன் நினைவு வளைவு பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒவ்வொரு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்பிக் கொண்டிருந்தனர். இங்குள்ள அழகுமுத்துககோன் நினைவு வளைவு புதுப்பிக்கும் பணி நடப்பதால், அதனை சுற்றி மரச்சாரம் கட்டப்பட்டிருந்தன. இந்நிலையில், அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் மரியாதை செலுத்த வந்த சில இளைஞர்கள் அந்த மரச்சாரம் வழியாக நினைவு வளைவில் ஏறி, தங்களது அமைப்பு கொடியை அங்கு வைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

https://static.hindutamil.in/hindu/uploads/news/2024/02/02/xlarge/1192694.jpgஒரு மாதத்துக்குள் 18 லட்சம் பேருக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

சென்னை: புதிய வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டவர்கள் உட்பட 18 லட்சம் பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை ஒரு மாதத்தில் பதிவுத் தபாலில் அனுப்பி வை...