
சேலம்: தமிழக அளவில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது, தமிழகத்தில் ரூ.2 கோடி மதிப்பில் சிறுநீரக பாதிப்பு கண்டறியும் பரிசோதனை பெட்டகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தை துவக்கி வைத்து அவர் பேசியதாவது: சிறுநீரக செயலிழப்பை தொடக்க நிலையிலேயே கண்டறியும் பரிசோதனை தமிழகத்தில் முதல் முறையாக சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தப்படும். சிறுநீரக செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் புற்றுநோய் இந்த மூன்று நோய் பாதிப்பும் உலகளவில் அச்சுறுத்தும் நோய்களாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, இந்த மூன்று நோய்களுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நோய் பாதித்தவர்கள் தற்காத்துக் கொள்ள பல்வேறு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்