
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே காவிரியாற்றில் நீந்த முயன்ற தச்சுத் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கர்நாடகா மாநிலம் அன்னூர் வட்டம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சித்தப்பாஜி மகன் யோகி(33). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் மகாலிங்கம்(39). தச்சுத் தொழிலாளிகளான இவர்கள் இருவரும் பணிக்காக தருமபுரி மாவட்டம் ஏரியூர் பகுதிக்கு நேற்று (ஜூலை 12) வந்துள்ளனர். காவிரியாற்றின் மறுகரை வரை பேருந்தில் வந்த அவர்கள் இருவரும் பண்ணவாடி பரிசல் துறையில் இருந்து நேற்று மாலை பரிசல் மூலம் ஒட்டனூர் நோக்கி பயணித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்