
நாகர்கோவில்: தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர் அளித்த புகாரின் பேரில் சினிமா ஸ்டண்ட் இயக்குநரும், இந்து முன்னணியின் கலை, இலக்கிய அணி மாநிலத் தலைவருமான கனல் கண்ணனை நாகர்கோவில் சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர்.
கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி ஒரு வீடியோவைப் பதிவேற்றம் செய்து, "வெளிநாட்டு மத கலாசாரத்தின் உண்மை நிலை இதுதான்?!... மதம் மாறிய இந்துக்களே சிந்தியுங்கள்! மனம் திரும்புங்கள்!" என்று பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவில் கிறிஸ்தவ மத போதகர் ஒருவர் இளம்பெண்ணுடன் நடனம் ஆடுவது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்