
கோவை: கோவை மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மேற்கு சுற்று வட்டச்சாலை எனப்படும் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என கடந்த 14.11.2011 அன்று நடந்த மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.
மேற்கு புறவழிச்சாலை திட்டப்பணி சேலம் - கொச்சின் சாலையில், மதுக்கரையில் உள்ள மைல்கல் பகுதியில் தொடங்கி கோவை - குண்டல்பெட் சாலையில் உள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. மதுக்கரையில் தொடங்கி சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி, பேரூர், மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்க நாயக்கன்பாளையம், சோமையன்பாளையம், வடவள்ளி, பன்னிமடை, குருடம்பாளையம், நஞ்சுண்டாபுரம் வழியாக நரசிம்மநாயக்கன்பாளையத்தில் முடிவடையும் வகையில் மொத்தம் 32.43 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.320 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்க கடந்த 2016-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்