
மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தில் கட்டாயம் புத்தக வடிவிலான வருகை பதிவேடு பயன்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஜெ.எஸ்.செல்வகுமார், உயர் நீதிமன்ற கிளையில் 2016-ல் தாக்கல் செய்த மனுவில், "நெல்லை அரசு போக்குவரத்துக் கழக மண்டலத்தில் 12 கிளைகளில் ஆயிரம் பேருந்துகள், 2 ஆயிரம் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் மற்றும் 5 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்த கிளைகளில் ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு வருகை பதிவேடு வைப்பதில்லை. ஓட்டுநர்கள், நடத்துனர்களால் தங்களது வருகையை பதிவு செய்ய முடியவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்