
சென்னை: செந்தில் பாலாஜியின் அமலாக்கத் துறை காவல் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்படுகிறார். அவரிடம் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலம் உள்ளிட்ட விசாரணை அறிக்கை விரைவில் டெல்லி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்படுகிறது.
சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பைபாஸ் இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அமலாக்கத் துறை ஆக.12-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரணை நடத்தலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்