
தருமபுரி: பிரதமர் மோடி ஹாட்ரிக் வெற்றியை பெறுவார் என தருமபுரியில் நடந்த, ‘என் மண் என் தேசம்’ அமிர்த கலச சேகரிப்பு நிகழ்ச்சியின்போது பாஜக தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி பேசினார்.
இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் முடிவுற்றதை கொண்டாடும் வகையில் மத்திய அரசு, ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற விழாவை கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொண்டாடி வருகிறது. அதன் ஒருபகுதியாக தற்போது, ‘என் மண் என் தேசம்’ இயக்கம் மூலம் நாடு முழுக்க அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவிடங்கள், ஆன்மீக தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், புகழ்மிக்க இடங்கள் என 7,500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து மண், செடிகள் சேகரித்துச் சென்று இந்திய தலைநகர் புதுடெல்லியில் ‘தியாக வனம்’ என்ற வளாகத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்