
திண்டுக்கல்: தமிழகத்தில் சாராயம், கள்ளச்சாராயம், டாஸ்மாக் இருக்கும் வரை வறுமையும் இருக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று (செப்.15) மாலை அண்ணாமலை மேற்கொண்டார். வேடசந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தொடங்கி, அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் வழியாக ஆத்துமேடு வரை நடந்து சென்றார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்