
கோவை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று (செப்.7) அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "கொசு, டெங்கு, மலேரியா, கரோனா போல சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும்" என்று பேசினார். இது, நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின், நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஜாதி வேறுபாடுகளைதான் ஒழிக்க வேண்டும் என கூறினேன் என இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்