
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பானிபூரி உற்பத்தி மையத்தில் பேட்டரி வெடித்ததால் ஏற்பட்ட தீ விபத்தில் கூரை ஓடுகள் எரிந்து சேதமடைந்தது. இதனை தீயணைப்பு வீரர்கள் ஒருமணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகில் வடக்குமாசி வீதி ராமாயணச்சாவடி பகுதியில் உத்தரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சிங் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அவர் பானிபூரி உற்பத்தி செய்து மதுரையின் பல பகுதிக்கும் விற்பனை செய்து வருகிறார். இதற்காக வீடு வாடகைக்கு எடுத்து பானிபூரி உற்பத்தி செய்து வருகிறார். இதில் அம்மாநிலத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் தங்கி வேலை பார்க்கின்றனர். இங்கு ஓட்டுக் கூரையுடைய முதல் மாடியில் வழக்கம்போல் மின்சார இணைப்புகள் மூலம் பேட்டரிகளுக்கு சார்ஜ் ஏற்றியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்