
சென்னை: வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடுபோக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த நாளான செப்.8-ம் தேதி, வார இறுதி நாட்களான செப்.9, 10-ம் தேதிகளில் சென்னையில் இருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதல் சிறப்புபேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து பயணம்மேற்கொள்ள இதுவரை 10,545 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்