
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வளாக பெயர்ப்பலகையின் நிறத்தை நீல நிறத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றியமைத்ததற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஊழியர்கள் சங்கத்தினர் கண்டன கோஷமும் எழுப்பினர்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியின் நலத்துறையின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தின் முன்பு அத்துறையின் பெயர்ப்பலகையானது நீலம் மற்றும் வெள்ளை நிற எழுத்துகளால் வைக்கப்பட்டிருந்தது. அதில் அம்பேத்கர் படமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழைய பெயர்ப்பலகையை எடுத்துவிட்டு புதிய பெயர்ப்பலகை நேற்று மாற்றப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்