
சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல் நாளில் ரூ.50,634 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், கோத்ரெஜ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் புதிய திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழக பொருளாதாரத்தை 2023-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கை முதல்வர் ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இதன் அடிப்படையில், பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 நாள் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்